01 December 2009

புலிகளை ஆதரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி

விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது தமிழக, புதுச்சேரி அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து தமிழகத்திலும்,புதுச்சேரியிலுóம் ஒரு சில அரசியல்வாதிகளும் ஒரு சில அமைப்பினரும் பேசி வருகின்றனர்.

பல முறை கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்தப் பிறகும் தொடர்ந்து வைகோ விடுதலைப் புலிகளை ஆதரித்து வருகிறார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அவர்கள் தேச விரோதிகள். எனவே, அவர்கள் மீது தமிழக, புதுச்சேரி அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இளங்கோவன் வீடு மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போர் மீது தேச விரோத சட்டம் பாய வேண்டும் என்றார்

No comments:

Post a Comment