27 December 2009

கால்நடைகளைத் தேடிச் சென்றவர்கள் கைது

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த கால்நடைகளைத் தேடிச் சென்ற ஆறு தமிழர்கள் மகாஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இவர்களது உறவினர்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமான இரா. துரைரெத்தினத்திடம் முறையிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் உன்னிச்சை, ஆயித்தியமலை, வவுணதீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.


தமது வதிவிட பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்த பின்னரே கால்நடைகளை இவர்கள் தேடிச் சென்றிருந்ததாகவும் இரா.துரைரத்தினத்திடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கைது தொடர்பாக மகாஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தான் தொடர்பு கொண்டதாகவும்,சந்தேகத்தின் பேரில் கைதான இந்நபர்கள் விசாரணையின் பின்பு விடுவிக்கப்படுவார்கள் என தனக்கு பதிலளிக்கப்பட்டதாகவும் துரைரெத்தினம் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment