27 December 2009

வவுனியாவில் 32 சிறுவர்கள் விடுதலை

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு முகாமில் சிறுவர் போராளிகள் என தடுத்து வைக்கப்பட்டிருந்தோரில் 32 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் புனர் வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் இந்த புனர்வாழ்வு நிலையத்தில் இவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இது பற்றி புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையான சிறுவர்கள் தெரிவிக்கையில் இந்தப் புனர்வாழ்வு நிலையத்தை ஒரு தடுப்பு முகாமாகத் தாங்கள் கருதவில்லை என்றும், அது ஒரு பாடசாலையாகவே இயங்கி வருகின்றது என்று தெரிவித்தனர். கல்வி கற்பதற்கும், தொழில் பயிற்சி பெறுவதற்கும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இங்கு வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment