16 December 2009

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின் ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படும் என ஐ. ம. சு. முன்னணி செயலாளர் நாயகமும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜெயந்த் மகாவலி நிலையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் அங்கு தெரிவிக்கையில் ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உட்கட்டமைப்பு அபிவிருத்தி இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி அடங்களான பல எதிர்காலத் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

33 கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் பிரசாரப் பணிகளை முன்னெடுப்ப தற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் குழுக்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீடு வீடாகச் சென்று பிரசாரப் பணிகளை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment