சிறார் போராளிகள் விடுவிக்கப்பட்டு குடும்பத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும்
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார் போராளிகள் அனைவரையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்து அவர்களை, அவர்களின் குடும்பத்தாருடன் ஒன்றிணைக்க வேண்டுமென்று, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா.வின் மூத்த பிரதிநிதி ஒருவர் கோரியிருக்கிறார்.
உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் உதாரணங்களை வைத் துப்பார்க்கும்போது இதுபோன்ற மோதல்களில் சம்பந்தப்பட்ட சிறார்கள், தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழும்போதே, போரினால் அவர்களுக்கு உண்டான உளவியல் பாதிப்புகளில் இருந்து நல்ல முறையில் மீண்டுவருகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக, ஐநாவின் சிறார்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரத்தை கவனிக்கும் ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஜெனரல் பேட்ரிக் கொமேர் அவர்கள் தெரிவித்தார்.
அவருடைய ஐந்து நாள் இலங்கை பயணத்தின்போது, விடுதலைப்புலிகளால் வலுக்கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டவர்களில் 300 சிறார்களை அவர் நேரில் சந்தித்து உரையாடினார்.
பி.பி.சி
No comments:
Post a Comment