12 December 2009

சரணடைந்த மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள்.


நேற்று ஆரம்பமான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்து சரணடைந்த மாணவர்களும் பரீட்சை எழுதுவதாக வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிப்பாளர் வீ.ஆர்.ஏ. ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார். நான்கு பரீட்சை நிலையங்களில் தோற்றும் சுமார் 400 இற்கும் மேற்பட்ட மாணவர்களாவர்

வவுனியா மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் மாணவர்கள், இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், புளியங்குளம், கனகராயன்குளம் ஆகிய பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், சரணடைந்த மாணவர்கள் என பலதரப்பட்ட 10,882 மாணவர்கள் வவுனியா மாவட்டத்தில் இம்முறை பரீட்சை எழுதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment