22 June 2015

இலண்டனில் 25 வது தியாகிகள் தினம்

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் பிரித்தானியா கிளையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 25வது வருட தியாகிகள் தினம் மேற்கு லண்டனில் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது.

தோழர் சிராப் தலைமையில் நடைபெற்ற  இந்த நிகழ்வில் EPRLF தோழர்கள் மற்றும்,PLOTE, EPDP, ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி, ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கு பற்றினர். சிறப்பு விருந்தினராக ஜெர்மனி இலிருந்து தோழர் அலெக்ஸ் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டார். தம்பி தோழர் குத்துவிளகேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

25 வது வருட நிகழ்வு கலந்து கொண்ட தோழர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாக இருந்தமை கலந்து கொண்டோரின் பலத்த வரவேற்ப்பை பெற்றது.

No comments:

Post a Comment