நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு ,கிழக்கு, மலையகம் உட்பட நாடளாவிய ரீதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு
வருவதுடன் பலபகுதிகளில் பொதுமக்களின் இயல்பு நிலை பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள அனர்த்தம் காரணமாக பல தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அத்து டன் மண்சரிவினால் பல வீடுகளும் கட்ட டங்களும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை சீரரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட
மக்களுக்கான நிவாரண சேவைகளை அரசாங்கம் துரிதப்படுத்தி வருவதாக
அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலையின் காரணமாக இன்றைய தினம் காலை வேளை
சில பகுதிகளில் குறைந்தளவில் மழை பெய்யும் என்றும், சில
பிரதேசங்களுக்கு மாலை வேளைகளில் இருள் சூழ்ந்த மேகமூட்டத்துடன் இடி
மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும் என வானியல் அவதான நிலையம்
அறிவித்துள்ளது.
நாட்டில் பல பகுதிகளில் மாலை வேளைகளில் மின்னல் தாக்கம்
அதிகமாக காணப்படும் என்பதனால் பொதுமக்கள் இடி மின்னல் தாக்கம்
குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என காலநிலை அவதான
நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் பல பகுதிகளுக்கும் கடந்த மூன்று வாரங்களாக
மிகவும் மோசமான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பல
பகுதிகளிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு
மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்ட வண்ணமுள்ளன.
களுத்துறை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை,
மஸ்கெலியா,அநுராதபுரம் மற்றும பொலன்னறுவை உள்ளிட்ட சில சில
பிரதேசங்களுக்கு வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் மக்கள் பெரும்
அவதியுற்ற வண்ணமுள்ளனர். குறித்த அனர்த்தங்ளின் காரணமாக மக்கள்
இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர்.
இது இவ்வாறிருக்க எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய
எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த
பிரதேசங்களுக்கான எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இதேவேளை நேற்றைய தினமும் பல பகுதிகளில் வெள்ளப்
பெருக்கெடுத்தமையினால் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக அநூராதபுரம் , பொலன்னறுவை , மட்டக்களப்பு , அம்பாறை
திருகோணமலை உட்பட வட மாகாண த்திலும் பல இடங்களில் வெள்ளம்
ஏற்பட்டுள்ளது. அதேபோன்று நீர்தேக்கங்கள் பெருக்கெடுத்தமையினால் பல
நீர்தேக்கங்களின் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும்
வடமத்திய மாகாணங்களில விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதன்காரணமாக குறித்த பிரதேசங்களில் விவசாயம் முழுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மலையக பகுதிகளில் தோட்டபுறங்களில்
மண்சரிவு அதிகளவில் இடம்பெற்று வருவதன் காரணமாக பல வீடுகள்
சேதமடைந்துள்ளன. அத்துடன்
தோட்டபுற மக்களின் தொழில் நடவடிக்கைகள் பெருமளவில
பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக மரம்
முறிந்து விழுந்தமையால் வீதி போக்குவரத்து நடவடிக்கைகளும் அதிகளவில்
பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் துரிதமாக செயற்பட்டு
வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய காலநிலை தொடர்பான அறிவித்தலை
நேற்றைய தினம் காலநிலை அவதான நிலையம் விடுத்திருந்தது. இதற்கமைய
நாட்டின் கொழும்பு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு, வட மத்திய, மற்றும் ஊவா
மாகாணங்களில் காலை வேளைகளில் குறைந்தளவிலான மழை பெய்யும் என்றும்
மாலை வேளைகளில் இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும்.
No comments:
Post a Comment