பாராளுமன்றத்தில் குவிந்திருந்த அதிகாரங்களை முன்னாள் ஜனாதிபதிகளான -ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, மஹிந்த போன்றோர் சிறிது சிறிதாக தமதாக்கி தமது கைகளுக்குள் அதிகாரங்களை வைத்திருந்தனர். இத்தகைய வலிப்பு வியாதி நிறைவேற்று அதிகாரத்தை வைத்திருந்த சகல ஜனாதிபதிகளுக்கும் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அத்தகைய நிலை ஏற்படவில்லை என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஹத்துரலியத்தைப் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மஹிந்த ராஜபக் ஷவை கட்சியின் தலைமைப்பதவியில் இருக்கும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் அது தனக்கு வேண்டாம் என்றும் மைத்திரிபால சிறிசேனவிற்கே கொடுத்துவிடும் படியும் மஹிந்த ராஜபக் ஷ கூறினார். அவரது மனது வருத்தத்தில் இருந்தாலும் அவர் என்றும் கட்சியை இரண்டாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க மாட்டார். தான் பிறந்ததும் அக்கட்சியில்தான், மரணிப்பதும் அதே கட்சியில்தான் எனக்கூறியவர் அவர்.
இன்னும் இரண்டு வாரங்களில் உள்ளூராட்சி சபைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக யார் யார் போட்டியிடுவது என்பதைத் தீர்மானிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன. அவ்வாறு விண்ணப்பிப்போரது தரத்தை நன்கு அறிந்தே அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். அவர்கள் கட்சியின் கொள்கைக்கு சார்பானவர்களா, கட்சியின் உத்தரவுகளை உதாசீனம் செய்தவர்களா? அல்லது ஒட்டுமொத்தமாக கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களா என்ற அனைத்து விடயங்களையும் நியமனப்பத்திரம் வழங்குவதற்கு முன் தேடிப்பார்ப்போம். அவை எப்படி இருப்பினும் கிராம மட்டத்தில் உள்ள கட்சிக்கிளைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அவர்கள் விதந்துரை செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிப்போம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரங்களைக் குறைப்பதாகக் கூறியே அவர் தனது கடமைகளைப் பொறுப் பேற்றார். நிறைவேற்று அதிகாரத்தின் இறகு களை வெட்டி அகற்றி பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் போது மறுபுறமாக தேர்தல் முறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment