05 November 2016

இந்திய – இலங்கை மீனவ பிரச்சனை - புதிய குழு நியமனம்

இந்திய – இலங்கை மீனவ பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுடில்லியில் இன்று இடம்பெற்ற மீனவ பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த அதிகாரிகள் மட்டத்திலான குழு எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் தடவையாக கொழும்பில் கூடவுள்ளது.
இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா அதிகாரிகளை உள்ளடக்கிய வகையில் இந்த குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி ஒன்று கூடும் இந்த குழுவினர், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கின்றமை குறித்து ஆராயவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படும் என்பதுடன், மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment