04 June 2018

19வது திருத்தத்தை மீளாய்வு செய்ய வேண்டும்.


ஐதேக மற்றும் தாராளவாத நிறுவனங்கள் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா வருவதை விரும்பாவிட்டால் அவர்கள் மகிந்த போட்டியிடுவதை அனுமதிக்கும் வகையில் 19வது திருத்தத்தை மீளாய்வு செய்ய வேண்டும்-  தயான் ஜயதிலகா

கடவுள் யாரை அழிக்க விரும்புகிறாரோ முதலில் அவர்களைப் பைத்தியமாக்கி  முட்டாள்தனமாகப் பேச வைக்கிறார்’ என்று பழைய வரி சொல்லியுள்ளது. நான் அதைச் சற்று  புதுப்பித்து ‘கடவுள் யாரை அழிக்க விரும்புகிறாரோ முதலில் அவர்களை முட்டாளாக்கி விடுகிறார்’ என்று சொல்கிறேன்.

ஸ்ரீலங்காவில் முட்டாள்தனமாக பேச முற்படும் இரண்டு வகையான பேர்வழிகள் உள்ளனர். ஒன்று அரசியல்வாதிகள், சித்தாந்தவாதிகள் மற்றும் அறிவு ஜீவிகளைக் கொண்டது, அவர்கள் அரசாங்கம் சார்பானவர்களாகவும் மற்றும் தாராளவாத தூண்டுதலை மேற்கொள்பவர்களாகவும் உள்ளவர்கள். மற்றையது அதே வகையைச் சார்ந்த தமிழ் தேசியவாதத்தைக் கடைப்பிடிக்கும் நபர்கள்.

முதல் ரகத்தைச் சோந்தவர்களைப் பற்றி முதலில் ஆராய்வோம். தாராளவாதிகள், ரணில் மற்றும் மைத்திரியின் அரசியல் விவாக வாக்குறுதிகளை புதப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் மற்றும் எழுச்சி பெறும் ராஜபக்ஸ அலையை ஐதேக மற்றும் ஸ்ரீலசுக ஒன்று சேர்ந்து தோற்கடிக்கலாம் என நம்புகிறார்கள். மேலும் மகிந்த ராஜபக்ஸ 20வது திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பை ஆதரிக்க முற்படுவாரோ என்கிற வஞ்சப்புகழ்ச்சியில் ஈடுபட்டிருப்பதுடன மற்றும் அதன் மூலம் கோட்டபாயாவின் எழுச்சி நிறுத்தப்படலாம் எனவும் அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

இந்த நபர்கள், ஜனாதிபதி சிறிசேனவின் ஆசியுடன் ஸ்ரீலசுகவின் கணிசமான பிரிவினர் பிளவுபட்டுள்ள வேளையில் ஐதேக மற்றும் ஸ்ரீலசுக வாக்குகளை ஒன்றுசேர்த்து கணக்கிடுவதை நிறுத்துவதைப் பற்றி ஏன் தங்களையே கேட்டுக்கொள்வதற்கு மறுக்கிறார்கள். வெளிப்படையாகவே ஸ்ரீலசுகவின் வாக்குகளையோ அல்லது அவற்றில் பெரும்பாலானவற்றையோ அரசாங்கத்தின் வாக்குகளில் இருந்து கழித்து அவற்றை எதிர்க்கட்சியுடன் சேர்க்க வேண்டும், மற்றும் ஸ்ரீலசுகவின் மத்திய குழுக் கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலை பற்றிய ஜனாதிபதி சிறிசேனவின் சொந்த வாசிப்பையே அவரது கருத்துக்களில் இருந்து விலக்கப்பட வேண்டும். ரணிலின் ஐதேகவுடன் அவர் ஒரு நெருக்கமான தழுவலைத் தொடருகிறார் என்று நிச்சயமாகத் தோன்றவில்லை.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தாராளவாதிகள் வெறுமனே முட்டாள்கள் அல்ல, அவர்கள் முற்றிலும் நேர்மையற்றவர்கள். உண்மையிலேயே அவர்கள் ஐதேக மற்றும் ஸ்ரீலசுகவை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் ரணிலின் இராஜினாமாவைக் கோரியிருக்க வேண்டும் மற்றும் அவருக்குப் பதிலாக ஐதேக தலைவராக சஜித் பிரேமதாஸாவை நியமித்திருக்க வேண்டும் அவர் ஒருவரை மட்டும்தான் அமைதியற்றிருக்கும் ஸ்ரீலசுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் தாராளவாதிகள் அதை விரும்பாதது மட்டுமன்றி அதைக் கோரவும் தயாராக இல்லை. அதற்கு மேலதிகமாக அவர்கள் கோட்டபாயாவை தடுக்க விரும்பினால் அதைச் செய்யக்கூடிய ஒரே மனிதரான மகிந்த ராஜபக்ஜவின் முழு அளவிலான மறுவாழ்வுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அழைப்பு விடுக்கவேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்கிறார்கள் இல்லை. எனவே அவர்கள் ரணிலை பிரதமராகவும் மற்றம் ஐதேக தலைவராகவும் மற்றும் வேட்பாளராகவும் தக்க வைக்கவே விரும்புகிறார்கள் மற்றும் ஸ்ரீலசுக மற்றும் ஜனாதிபதி சிறிசேன ஆகியோரை அத்தகைய ஒரு ஐதேக வுடன் உறுதியாக நிற்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள் அத்துடன் அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை மற்றும் அல்லது புதிய அரசியலமைப்பைப் பெறவேண்டும் என வரும்புகிறார்கள். இவர்கள் எவ்வளவு முட்டாள்களாக உள்ளார்கள் என்பது புரிகிறதா?

நிகழ்ச்சி நிரலில் இரண்டு சீர்திருத்த முன்மொழிவுகள் உள்ளன, இவை இரண்டுமே நிராகரிக்கப்படும் என்பது சரியாகவே உள்ளன. அந்த இரண்டு முன்மொழிவுகளும் ஜேவிபியின் 20வது திருத்தம் மற்றது அரசாங்கத்தின் வரைவு அரசியலமைப்பு. நிராகரிப்பு இடம்பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று நேரம். வெகுஜனங்களின் மனநிலை மாற்றத்தை நோக்கியே உள்ளது, அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பதைப் பற்றியல்ல. மக்களின் மனநிலை அரசாங்கத்தை நிராகரித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதிலேயே உள்ளது. அடுத்த வருடம் வெளியேறுவதற்கான ஒரு வாய்ப்பு வருகிறது என்கிற ஒரு விடயத்தில் மக்கள் நிச்சயமாக உள்ளார்கள் - அதாவது ஜனாதிபதி தேர்தல். அரசியலமைப்பு மாற்றங்களினால் அந்த வெளியேறும் வழியை அபாயத்திற்கு உட்படுத்தும் நோக்கம் நிச்சயமாகக் கிடையாது, அது தேசிய தேர்தல்களை தள்ளி வைப்பதற்கான ஒரு சாளரத்தை திறந்து வைக்கும். நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படுமானால் அடுத்த தேர்தல் 2020ல் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலாக இருக்கும் 2019 ஜனாதிபதி தேர்தலாக இருக்காது. வெகுஜனங்கள் அத்தகைய ஒரு இடைநிறுத்தலை வரவேற்பதற்கு எந்த ஒரு வழியும் இல்லை. நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்துடன் அத்தகைய ஒரு தள்ளிவைப்புக்கு எந்தவொரு எதிர்க்கட்சியும் ஒத்துழைப்பு தருவதாக இருக்காது.

வெகுஜனங்களின் மனப்போக்கு மற்றும் முன்முயற்சிக்கான தவறான நேரம் என்பன தொடர்பான இரண்டாவது காரணி, 20வது திருத்தம் மற்றும் வரைவு அரசியலமைப்பு ஆகிய இரண்டு பிரேரணைகளும் நாட்டிலும் மற்றும் அதிகார மையத்திலும் ஒரு பலவீனத்தை உருவாக்குகின்றன. இந்தப் பிரேரணைகள் நடைமுறைப் படுத்தப்பட்டால் அது 19வது திருத்தம் காரணமாக அமைக்கப்பட்ட பல முனைவாக்கங்களை கடந்து செல்ல வேண்டியதாக இருக்கும். ஒரு வலுவான அரசாங்கம் மற்றும் தலைமை என்பன மூலமாக ஒழுங்கை மீட்டெடுக்கவேண்டும் என்பதே தற்போதைய வெகுஜனங்களின் மனநிலையாக உள்ளது. அடுத்த தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்கிற நம்பிக்கையில் உள்ள எந்தவொரு எதிர்க்கட்சியும் மேலும் பலவீனமடைந்து வரும் ஒரு அரசுக்கு ஆதரவளிப்பதைக் காணமுடியாது.

மகிந்த ராஜபக்ஸ நாட்டை வழிநடத்துவதற்கு திரும்புவதை பார்க்கும் நியாயமான ஆசை கூட இலலாமல் - நான் பெரியளவில் பகிரும் ஒரு உணர்வு - நாட்டைப் பலவீனப்படுததும் ஒரு அரசியலமைப்புச் சீர்திருத்தத் திட்டத்துக்கு ஒரு எதிர்க்கட்சி ஒத்துழைக்கிறது. நிலமையானது பலவீனமடையாமல் இருக்கும் அதேவேளை சிங்கள சமூகம் மகிந்த ராஜபக்ஸவை ஒரு சக்திவாய்ந்த, மிகவும் பிரபலமான மற்றும் மரியாதைக்குரிய பிரதம மந்திரியாகக் காணும் ஒரு வெற்றிகரமான தீர்வை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அந்த வெற்றிகரமான தீர்வானது ஒன்று மகிந்த ராஜபக்ஸவை பிரதமராகவும் அவரது தெரிவான எவரையும் ஜனாதிபதி வேட்பாளராகவும் ஆக்குவது என்பதாகும் ( பலரது விருப்பத்துக்கும் உரிய கோட்டபாயாவை, ஆனால் எல்லா வட்டாரங்களிலும் அல்ல).

கோஷ்டிகளின் போட்டி தெரிவு செய்வதை நிர்ப்பந்திக்கும் என்கிற நம்பிக்கையில் எதிர்க்கட்சி 20வது திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பை வழங்குவது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம். அதற்கு மாறாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இருக்கவேண்டும் அரசாங்கத்தின் செல்வாக்கற்ற தன்மை மீதியைச் செய்து முடித்துவிடும். இதன்படி நிலமை தலைகீழாக மாறிவிடும். இதை ஐதேக மற்றும் தாராளவாதிகள்தான் தெரிவு செய்ய வேண்டும்.
குறிப்பாக தாராளவாதிகளுக்கும் மற்றும் பொதுவாக ஐதேகவுக்கும், உள்ள மிக மோசமான காட்சி கோட்டபாயாவை ஜனாதிபதியாகக் காணுவதுதான், இதற்கு மேசை மேல் ஒரு தெரிவு உள்ளது, ஒரே ஒரு தெரிவு மட்டுமே: 19வது திருத்தத்தை இப்போது மீளாய்வு செய்வது, ஆகவே இதன்படி மகிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி போட்டிக்கு நிறுத்துவது அல்லது அடுத்த வருடம் கோட்டபாயாவை எதிர்கொள்வது.

இந்த அமைப்புக்கு இரண்டாவதாக ஒரு தெரிவும் உள்ளது, சஜித் பிரேமதாஸவை ஐதேக வேட்பாளராக  போட்டியிட வைத்து. பிரேமதாஸ தளத்தைக் கைப்பற்றி காலதாமதத்தைக் குறைத்து அதை ஒரு வலுவான போட்டியாக மாற்றுவது, அல்லது ரணிலைப் போட்டியிட வைத்து கடந்த கால் நூற்றாண்டு காலமாக நாட்டின் தேசியத் தலைவர் என்கிற உயர்பதவியைக் கட்சி அடையமுடியாமல் இருப்பதை அடுத்த அரை நூற்றாண்டு வரை நீட்டிக்கச் செய்யலாம்.

நியாயமாக எனது கண்ணோட்டத்தில் இப்போது நடைபெறும் உண்மையான விவாதம் எதிர்க்கட்சித் தலைவர்களில் மேற்பரப்புக்கு சற்று கீழே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றச் சமநிலையை மாற்றி; மற்றும் மகிந்தவை  மேடையின் மையப்பகுதிக்கு நகர்த்தவது (இது எனது தனிப்பட்ட அளவுகடந்த அவா) தொடர்பான சாத்தியம் பற்றி அல்லது அது தோல்வியுற்றால் சிறந்த வேட்பாளரை தேர்வு செய்வது. இதுபற்றி அரசாங்கம் என்ன சொல்கிறது, நினைக்கிறது அல்லது செய்கிறது என்பது அதிகம் முக்கியத்துவமானது அல்ல ஏனென்றால் இது தோல்விக்குரிய ஒரு அரசாங்கம்.
அரசாங்கத்துக்குள் ஜனாதிபதி சிறிசேன இன்னும் தெரிவுகளைக் கொண்டுள்ளார், அவர் ஸ்ரீலசுகவின் 16 கிளர்ச்சியாளர்களையும் எதிர்க்கட்சி வரிசைக்கு நகர்த்தி ஐதேகவுக்கு எதிராக இரண்டாவது ஒரு முன்னணியினை தீர்க்கதரிசனமான முறையில் உருவாக்கியுள்ளார். எதிர்க்கட்சி அணிகள் இப்போது அதிகம் விரிவடைந்துள்ளன மற்றும் இது ரணில் தனது தாமதமான அரசியலமைப்பு நகர்வுகளை  முன்னகர்த்ததுவதற்கு தடையாக மகிந்த மற்றும் மைத்திரிக்கு அதிகம் வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

ஐதேக உண்மைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஸ்ரீலசுக பதவியில் உள்ளது மற்றும் ஆச்சரியமான முறையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நாட்டின் அதி உயர் பதவியை வகித்துள்ளது. ஸ்ரீலசுக மூன்று ஜனாதிபதிகளை உற்பத்தி செய்துள்ளது சந்திரிகா, மகிந்த. மற்றும் மைத்திரி. 1988ன் பிற்பகுதியில் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டதிலிருந்து ஐதேக எந்த விளைவையும் தரவில்லை. அப்படியானால் ஸ்ரீலசுக ஏன் இந்த முறையை நீக்கவில்லை? தற்பொழுது அதிகாரபூர்வ ஸ்ரீலசுக 14 வீத வாக்குகளைப் பெற்று கீழிறங்கியுள்ள போதிலும் பொஹொட்டுவ 40 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது, இதற்கு காரணம்; பிளவு நிலைக்குத் தள்ளப்பட்டதினால் ஸ்ரீலசுக அதன் வழக்கமான ஜனரஞ்சகப் போர்வைக்கு மாறாக  போலிவேடம் பூண்டுள்ளது. பொஹொட்டுவ (கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன) மற்றும் ஸ்ரீலசுக என்பனவற்றை ஒன்று சேர்த்தால் சிறுபான்மை வாக்குகள் இல்லாமலே தேர்தலை வெற்றி கொள்ள முடியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகரான சரத் அமுனுகமவின் உறுதியான அனுமதி, கோட்டபாய ராஜபக்ஸவின் கொள்கை கோட்பாட்டை ஒப்புக்கொண்டதின் மூலம் கிடைத்துள்ளதினால் ஸ்ரீலசுகவின் வலது சாரியினரும் அவரது வேட்பாளர் நியமனத்துக்கு ஆதரவளிப்பார்கள் என்று சாதாரணமாகவே அனுமானிக்க முடிகிறது. சஜித் ஐதேகவின் வேட்பாளராக இல்லாவிட்டால் அநேகமாக ஐதேக கிளாச்சியாளர்களும் தமது ஆதரவை வழங்குவார்கள்.

ஆய்வு விவாதங்களுக்கு அப்பால், 20வது திருத்தம் மற்றும் புதிய அரசியலமைப்பு என்பனவற்றை நாம் ஏன் ஆதரிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களையும் மற்றும் எங்களுக்கு ஏன் வலிமையான ஒரு தலைமை தேவை என்பதற்கான காரணங்களையம் சமீபத்தைய செய்தி எங்களுக்குத் தந்துள்ளது - முற்போக்கான “ரீலங்கா மாதிரியான அபிவிருத்தியை”    (கொட்பிரே குணதிலகா) நான் விரும்பியபோதிலும், விசேடமாக ஒரு பில்லியன் ஆட்களுக்கான ஒரு சந்தையை நாங்கள் கொண்டிராதபோதும் மற்றும் ஒரு போட்டிகரமான பலகட்சித் தேர்தல்களை நாங்கள் கொண்டிருப்பதினால், சீனாவின் அல்லது வேறு ஏதாவது ஒரு மாதிரியை பின்தொடருவதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம்.

-தயான் ஜயதிலகா-

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி -  தேனீ இணையம்

No comments:

Post a Comment