இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை உயர் மட்ட குழு சந்திப்பு
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கொண்டகுழு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடனான சந்திப்பின்போது இலங்கையின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதாக இந்தியா உறுதியளித்துள்ளதாகவும் கண்ணிவெடி அகற்றுவதற்கும் உதவ இந்தியா தயாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கப்டன் அலி கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களை இறக்குவதற்கு இலங்கை அனுமதி வழங்குவதெனவும் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment