18 August 2009

எவர் சொன்னாலும் வன்னி இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற முடியாது : சரத் பொன்சேகா

எவர் என்ன சொன்னாலும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக்குடியேற்ற முடியாதென கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டதுடன் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். இதன்போது பீடாதிபதிகள் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கையிலேயே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எவர் எதைச் சொன்னாலும் கண்டபடி அகதி முகாம்களிலிருந்து மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்திவிட முடியாது. மக்கள் அங்கு வழமையான அமைதி நிலையில் வாழ்வதற்கான வழிவகைகளை முதலில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அங்கு அங்குலத்திற்கு அங்குலம் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். எஞ்சியுள்ள புலிப் பயங்கரவாதிகள் அகதி முகாம்களில் அகதிகளுடன் உள்ளனர். அவர்களும் அங்கிருந்து வெளியேற தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே அனைத்தும் சீர்செய்யப்பட்ட பின்னரே, அகதி முகாம்களிலுள்ள மக்கள் உரிய வசதிகளுடன் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்"என்றார்.வெளிநாடுகளும் பல தரப்பினர்களும் எதனைக் கூறினாலும் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே அம்மக்களைப் பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டுமென பௌத்த பீடாதிபதிகளும் தெரிவித்தனர் -நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment