கே.பி. கைது நிலைவரம்: புலம்பெயர் புலிகளுக்கு பின்னடைவு- வி. ராமன்
விடுதலைப்புலிகளை மீண்டும் இயங்கவைக்க உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்திருக்கும் இலங்கைத் தமிழர்களில் சில பகுதியினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு குமரன் பத்மநாதன் கைது பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனின் மரணம் குறித்து ஒருபோதும் கூறாத புலம்பெயர் இலங்கைத் தமிழரில் ஒரு சாராரின் முயற்சிகளுக்கு இது பின்னடைவை தந்திருக்கிறது என்று இந்தியாவின் ஓய்வுபெற்ற அமைச்சரவை மேலதிக செயலாளர் வி. ராமன் தெரிவித்துள்ளார். அவுட் லுக் சஞ்சிகையில் குமரன் பத்மநாதன் கைது தொடர்பாக ராமன் எழுதியிருப்பதாவது; 2009 ஆகஸ்ட் 6 இல் மலேசிய பாதுகாப்பு முகவர் அமைப்புகள் இலங்கையின் பாதுகாப்பு முகவர் அமைப்புகளிடம் குமரன் பத்மநாதன் அல்லது கே.பி.யை கையளித்துள்ளனர்.
ஹோட்டல் ஒன்றிலிருந்து அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.கே.பி. மலேசியாவில் சில வருடங்களாக வசிப்பதாக விசாரணை மற்றும் புலனாய்வு முகவரமைப்புகளால் சந்தேகிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் தமிழ் சமூகத்தின் மத்தியிலிருந்த விடுதலைப்புலிகளின் அனுதாபிகளின் உதவியுடன் அங்கு அவர் இயங்கிவந்ததாக கூறப்பட்டது.
மேலும் முழுவிபரம் http://www.theneeweb.de/html/120809-5.html
No comments:
Post a Comment