16 April 2010

மீள் குடியேற்ற பணி துரிதம்

வவுனியா நிவாரணக் கிராமங்களில் எஞ்சியூள்ளவர்களை மீளக்குடியேற்றும் பணியை துரிதப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் 16-04-2010 அன்று முல்லைத்தீவு நகரில் 1200 பேரும், எதிர்வரும் 18-04-2010 1300 பேரும் குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.
மேலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள இடம் பெயர்ந்தவர்களையும் மீளக்குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக அவர்களது தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவூ நகரிலுள்ள முள்ளியவளை மத்தி, கள்ளப்பாடு, வண்ணான்குளம், உன்னாப்பிளவூ, கரச்சிக்குடியிருப்பு ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலேயே இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மீள்குடியேற்றும் பணிகள் மீண்டும் துரிதப்படுத்தப்படுகின்றது.
மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் அகற்றப்பட்டு அவை மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டதையடுத்தே அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக முல்லைத்தீவ மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment