02 May 2010

ஐக்கியத்தை வரவேற்கிறோம் - த.சித்தார்த்தன்

எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும என்று தமிழ் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழல் உருவானால் அது வரவேற்கத்தக்கது. அவ்வாறானதொரு ஐக்கியம் ஏற்பட்டால் நாம் அதனை வரவேற்போம். எங்களது பங்களிப்பினையும் வழங்கத் தயாராகவுள்ளோம். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் நாங்கள் எவருடனும் பேசத் தயாராக இருக்கிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்தியிலும் இதற்கு ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டால் அதனை வரவேற்கிறோம்.

ஆனால் தமிழ் பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக 13வது திருத்தச் சட்டமூலம் இருக்க முடியாது. அதற்கு மேலாகத்தான் இருக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படல் வேண்டும். அது ஒரு சமஷ்டி அமைப்பைக் கொண்ட தீர்வாக இருக்க வேண்டும்;. தமிழ் மக்கள் தாங்களே தங்கள் விடயங்களை கையாளக்கூடிய அதிகாரப்பகிர்வாக அது இருக்க வேண்டும்.

மேலும் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்ற விடயத்தில் ஆர்வம் காட்டாவிட்டாலும் அது ஒரு சாத்தியமான முடிவாக இருக்குமென நான் நம்பவில்லை.

தனித்தனியே பேசுவதைவிட கூட்டுச்சேர்ந்து பேசுவது நல்லது

நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment