30 August 2009

தமிழ் ஈழ மண் வேண்டும் பணப் புலிகள்!

- சதாசிவம். ஜீ.

துரோகிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும், தம்மை கேள்வி கேட்பவர்கள்கூட துரோகிகள்தான் என்றும் தலைவர் உயிர் இருக்கும்வரை தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் என புலிகள் கொன்று குவித்தது எப்படி சாதாரணமோ அதேபோலத்தான் தற்போது வெளியாகியுள்ள தமிழர்களை கண்ணைக்கட்டி சிங்கள இராணுவம் சுடும் காட்சியும். இந்தக் காட்சிப்படுத்தல் உண்மையானதா?புனையப்பட்டதா?என்ற ஐயப்பாடு முன்வைக்கப்பட்டாலும்,இது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை.

ஜே.வி.பியின் கிளர்சியை ஒடுக்குவதற்கு பிரேமதாசா அரசாங்கம் எவ்வாறான அராஜகத்தைப் புரிந்தது என்பதை முழு உலகமும் அறியும். வன்முறை மூலம் தமக்கு எதிரான சக்திகளை ஒழித்துக்கட்டவேண்டும் என்று பலம்பொருந்தியவர்கள் நினைக்கிறார்களோ அதன்பிறகு சொந்த இனம், ஏன் சொந்தம் - பந்தத்தைப் பற்றிகூட கிஞ்சித்தும் சிந்திக்காது.
முழுமை
http://www.theneeweb.de/html/300809-2.html

No comments:

Post a Comment