26 October 2009

வவுனியா- மன்னார் மாவட்டங்களுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான பாடபுத்தகங்கள்

அடுத்த ஆண்டு (2010) இற்கான பாடசாலை மாணவர்களுக்குரிய பாடசாலைப் புத்தங்கங்கள் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களப் பிரதி ஆணையாளர் ஜி.என்.சில்வா தெரிவித்துள்ளார். 38 லொறிகளில் கொண்டுசெல்லப்பட்ட பத்தரை இலட்சம் புத்தகங்கள் அம் மாவட்டங்களின் கல்வித்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கும்,வவுனியா நிவாரண கிராமங்களில் உள்ள பாடசாலைகளுக்கு எட்டரை லட்சம் புத்தகங்களும், மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு லட்சம் புத்தகங்களும் கையளிக்கப்பட்டுள்ளன. 2010 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன்னதாகவே பாடப்புத்தகங்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கும் ஏ-9 வழியாக யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment