தனி நாடு கோரிக்கைக்கு மலையகத் தமிழர்கள் ஆதரவு அளிக்கவில்லை - அமைச்சர் மு. சிவலிங்கம்
இலங்கை பிரச்னைகளில் பெரிய நாடு என்பதால் இந்தியா தலையிட முடியாது. அதைவிட பெரிய நாடு என்ற வகையில்தான் சீனா தலையிடுகிறது என்று இலங்கை தோட்ட கட்டமைப்புப் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் திருப்பதி செல்லும் வழியில் உதகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் டிசம்பர் மாத இறுதிக்குள் அவரவர் இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவர். இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் 15 லட்சம் பேர் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 28 சதம் பேர் தமிழ் மக்கள். ஆனால், இலங்கையில் நிலவிய பல்வேறு பிரச்னைகள் காரணமாக அங்கு பொருளாதார மேம்பாடு இல்லை. அரிசி கிலோ ரூ. 100 க்கும், பருப்பு கிலோ ரூ. 260 க்கும் விற்பனையாகிறது.
முழுமை http://www.sooddram.com/News/Oct2009/Oct252009_Thailand.htm
No comments:
Post a Comment