30 October 2009

விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு

'சண்டேலீடர்” செய்திப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெடெரிக்கா ஜென்ஸ் மற்றும் செய்தி ஆசிரியர் முனாஸ் முஸ்தபா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு சண்டே லீடர் ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியதுடன் இப் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டு விசாரணைகள் முடிவடையாத நிலையில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுட்டிக்காட்டியுள்ளது.

ஜென்ஸ{க்கும் முஸ்தபாவுக்கும் கடந்த வாரத்தில் பல அச்சுறுத்தல் கடிதங்கள் கிடைத்துள்ளன. அக்கடிதங்களில், "எழுதுவதை நிறுத்துமாறு" அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment