மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரு முறை பதவி வகித்தவரும் மதுரை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றிய தோழர் மோகன் அவர்களின் பிரிவு முற்போக்கு, இடதுசாரி அரசியல் அரங்கில் ஒரு பாரிய வெற்றிடத்தை தோற்றுவித்துள்ளது. இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினூடாக அவர் தொழிலாளர்,விவசாயிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் விடிவிற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் மானிட தர்மம் இன்றுவரை இவ் உலகில் நிலைத்து நிற்பது இத்தகைய உன்னத மனிதர்களால்தான். வரலாறு வேறு காலகட்டங்களில் இத்தகைய மனிதர்களை உருவாக்கியுள்ளது.பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இந்திய மார்க்சிஸ்ட் கட்சியுடனான தனது உறவை எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறது. தோழர் ராமமூர்த்தி, தோழர் நல்லசிவம், தோழர் சுர்ஜித் போன்ற தோழர்கள் எமக்கு வழிகாட்டிகளாகவும் இருந்திருக்கிறார்கள். இடர்மிகுந்த காலங்களில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி எம்முடன் எமக்கு துணையாக இருந்திருக்கிறது. தோழர் மோகனின் இறப்பின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம். அன்னாரின் குடும்பத்தினிருக்கும், அவர் சார்ந்த கட்சினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.தோழர் மோகனுக்கு எமது இதய அஞ்சலிகள்.
தி.ஸ்ரீதரன்
பொதுச் செயலாளர்
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
01 November 2009
மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட செயலாலரும்,மதுரை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் மோகனுக்கு எமது அஞ்சலிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment