இந்து ஆலயங்களில் கொள்ளை : நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
இந்து ஆலயங்களில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதான சமய வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சப்ரகமுவ மாகாண முன்னாள் உபதலைவரும் இரத்தினபுரி சிவன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவருமான கணபதி இராமச்சந்திரன் ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம்; கோரிக்கை விடுத்துள்ளார்.
காலி சிவன் ஆலயத்திலிருந்து 17 விக்கிரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இரத்தினபுரி சிவன் ஆலயம், இரத்தினபுரி காளி கோயில் உட்பட இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பல இந்து ஆலயங்கள் கடந்த காலங்களில் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன.
இது குறித்து ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்து மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களைக் கொள்ளையடிக்கும் விஷமிகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய பாதுகாப்பு வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment