வடக்கு அரசியல்வாதிகளின் அரசியல் நியாயங்களுக்காக வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது. அதேபோல் இராணுவத்தையும் வெ ளியேற்றப்போவதில்லை என்று அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் தெரிவித்துள்ளன. வடக்கு முதல்வரின் கருத்துகளுக்கு எம்மால் எந்த பதிலையும் தெரி விக்க முடியாது. நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர் பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட் டது.
வடக்கில் தொடர்ந்தும்இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இராணுவம் தடையாக இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து பதிலளித்த இராணுவ தளபதியும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவிக்கையில்,யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. அதற்கான தேவையும் இருந்தது. எனினும் கடந்த காலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் அநாவசியமான இராணுவ முகாம்கள் என்பன மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தின.
எனினும் சமீப காலத்தில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. வடக்கில் மக்களின் காணிகளில் இருந்த அநாவசிய முகாம்களை விடுவித்து அப்பகுதி மக்களை உரிய இடங்களில் குடியமர்த்தியுள்ளோம். அதேபோல் இன்று வடக்கில் நிலைமைகள் சாதாரணமான வகையில் அமைந்துள்ளன. பொதுமக்களுக்கு இராணுவத்தினால் எந்த இடையூறும் ஏற்படுவதில்லை. அதேபோல் பொதுமக்களும் எந்த முறைப்பாடுகளையும் இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கவும் இல்லை.
எனினும் வடக்கில் உள்ள அரசியல் தலைமைகள் தமது அரசியல் நிலைப்பாடுகளை தக்கவைக்கும் வகையிலும் சர்வதேச தரப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையிலும் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளதென விமர்சித்து வருகின்றனர். எனினும் இவற்றில் எந்த உண்மைகளும் இல்லை. வடக்கிலும் சரி நாட்டில் எந்தப் பகுதியிலும் சரி இராணுவ முகாம்கள் எவையும் அகற்றப்படாது. வடக்கு தெற்கு என அனைத்து பகுதிகளிலும் இராணுவ பாதுகாப்பை பலபடுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
மேலும் சாலாவ இராணுவ முகாமை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. பாதுகாப்பான வகையிலும் மக்களை பாதிக்காத வகையிலும் ஆயுத களஞ்சிய அறைகளை நிர்மாணிக்க வேண்டும். ஆகவே அவை தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். அதேபோல் இந்த வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட வகையில் நடந்த ஒன்றாக அமைய வாய்ப்பில்லை. எனினும் விசாரணைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன கருத்து தெரிவிக்கையில்,வடக்கில் இப்போது இராணுவ ஆக்கிரமிப்பு என்று கூறுமளவு எந்த மோசமான நிலைமைகளும் இல்லை. சாதாரணமான வகையிலேயே அங்கு நிலைமைகள் உள்ளன. இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த பொதுமக்களின் காணிகள் மீண்டும் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் அனாவசிய முகாம்களை நாம் தகர்த்து பொதுமக்களுக்கு இடங்களை வழங்கியுள்ளோம். அதற்காக வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது. அநாவசிய முகாம்களில் இருந்த எமது இராணுவத்தை பிரதான இராணுவ முகாம்களுக்குள் கொண்டுவந்துள்ளோம். அவர்களால் பொதுமக்களின் செயற்பாடுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.
மேலும் வடமாகாண சபையும், வடக்கு முதல்வரும் இராணுவத்தை வெளியேற்ற கோருவதனால் எம்மால் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது. வடக்கில் எவ்வாறு இராணுவம் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதோ அதேபோல் தெற்கிலும் இராணுவம் உள்ளது. ஆகவே ஒரு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி அவர்களை எங்கு கொண்டுசெல்வது? இந்தக் கோரிக்கையில் வெறும் அரசியல் சுயநலம் மட்டுமே உள்ளது. ஆகவே இவர்களின் கருத்துகளுக்கு எம்மால் எந்த பதிலையும் தெரிவிக்க முடியாது. நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி- வீரகேசரி
No comments:
Post a Comment